ஆமை கனவில் வந்தால் என்ன பலன் | Aamai kanavil vanthal
வணக்கம் நண்பர்களே.!!இந்த உலகத்தில் மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் தூங்கும் பொழுது கனவு வருவது வழக்கமான ஒன்றாகும். அப்படி வரும் கனவுகளுக்கு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.
அப்படி வரும் கனவுகளில் கெட்டது நடப்பது போலும் வரலாம் நல்லது நடப்பது போலும் வரலாம்.ஒரு சில கனவுகளில் நடப்பது போல் நேரில் நடக்கலாம். அதற்காக அனைத்து கனவுகளில் வருவது போல் நேரில் நடக்காது.
கனவுகளுக்கான பலன்கள் மட்டும்தான் நேரில் நடைபெறும்.அப்படி கனவில் கடலில் வசிக்கும் ஆமை வந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
ஆமை கனவில் வந்தால் என்ன பலன்
ஆமை கனவில் வந்தால் கனவு காண்பவர் ஆண்களாக இருந்தால் அவர்களுக்கு தொழிலில் நல்ல லாபங்கள் கிடைக்கும். பெண்களின் கனவில் ஆமை வந்தால் எதிர்காலத்தில் உயர்ந்த நிலை அடைய இருப்பதையும், தொழிலில் வளர்ச்சி அடைவதையும் இந்த கனவு உணர்த்துகிறது.
பெரிய ஆமை கனவில் வந்தால்
பெரிய ஆமை கனவில் வந்தால் கனவு காண்பவர்களுக்கு வருமானம் உயரும் இதனால் செல்வ வளங்களுடன் வாழ்வில் சந்தோஷமாக இருப்பார்கள். நீங்கள் வாழ்வில் சரியான பாதையில் செல்வதால் அதன் மூலம் உங்களுக்கு செல்வ வளங்கள் கிடைத்து வாழ்வில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
மீன் கனவில் வந்தால் என்ன பலன் |
ஆமை இறைச்சி சாப்பிடுவது போல் கனவில் வந்தால்
ஆமை இறைச்சி சாப்பிடுவது போல் கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு உடல்நல குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது அதனால் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும்.அதிக நேரம் வேலை செய்யாமல் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் சத்தான உணவுகளை அதிக அளவு சாப்பிட வேண்டும்.
ஓடு இல்லாத ஆமை கனவில் வந்தால்
ஓடு இல்லாத ஆமை கனவில் வந்தால் கனவு காண்பவர் தான் செய்யக்கூடிய காரியங்களில் குழப்பத்துடன் இருப்பதால் பிறரின் அறிவுரைப்படி அந்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடித்து விடுவார்கள்.
ஆமை கடிப்பது போல் கனவில் வந்தால்
ஆமை கடிப்பது போல் கனவில் வந்தால் கனவு காண்பவர் எந்த ஒரு விஷயத்திற்கும் பயந்து கொண்டே இருப்பார்கள் அந்த பயத்திலிருந்து வெளியே வருவதற்கு இந்த கனவு உணர்த்துகிறது.
மேலும் கனவுகளின் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்
மயில் கனவில் வந்தால் என்ன பலன் |
கோழி கனவில் வந்தால் என்ன பலன் |
புலி கனவில் வந்தால் என்ன பலன் |
நாய் கனவில் வந்தால் என்ன பலன் |