நாமக்கல் மாவட்டம் ரெட்டிபட்டி அண்ணா நகரை சேர்ந்தவர் தான் சித்ரா (47) இவருக்கு திருமணம் ஆகி 25 வயதில் ஒரு மகனும் 15 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சித்ரா வீட்டில் தனியாக இருக்கும் போது விஷம் குடித்து விட்டார்.
சித்ரா விஷம் குடித்ததை அறிந்த அக்கம்பக்கத்தினர் சித்ராவை மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.தீவிர சிகிச்சையில் இருந்த சித்ரா நேற்று காலை உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து சித்ராவின் மகன் நாமக்கல் காவலரிடம் புகார் அளித்துள்ளார். சித்ராவின் மகன் கொடுத்த புகாரியின் பெயரில் காவலர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் சித்ராவின் மகனுக்கு 25 வயதாகி திருமணத்திற்காக பெண் கிடைக்காததால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது.