ரஜினி தென்னிந்தியா திரைப்படங்களில் நடிக்கும் ஒரு இந்திய திரைப்பட நடிகராக இருக்கிறார் என்னதான் தென்னிந்தியா திரைப்படங்கள் நடித்தாலும் உலக அளவில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.இவர் கடைசியாக நடித்த அண்ணாத்த திரைப்படம் கலையான விமர்சனங்களை பெற்று தோல்வியடைந்தது.
இதனை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்ச்சர் தயாரிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் தற்போது நடித்துள்ளார். ஜெயிலர்படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.இந்த படத்தில் நடிகர் ரஜினியுடன் இணைந்து சிவராஜ்குமார்,மோகன்லால்,சுனில்,தமன்னா ரம்யா கிருஷ்ணன்,யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் ஒரு பாடலானது நேற்று மாலை 6 மணி அளவில் வெளியிடப்பட்டு மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.தமன்னா இதில் கவர்ச்சி உடைய அணிந்து நடமாடியுள்ளார்.அந்த நடனம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து இழுத்து உள்ளது.
ரஜினி ரசிகர்களுக்கு கொண்டாட்டத்திற்கு மேல் கொண்டாட்டத்திற்கு மேல் கொண்டாட்டம் கொடுப்பதற்கு படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அந்த வகையில் ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக உள்ளது என ஏற்கனவே பாடக்கு குழுவினர் அறிவித்திருந்தனர் அதை தொடர்ந்து தற்பொழுது ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக வருகின்ற 29ஆம் தேதி நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.ஆனால் இது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.