கம்பர் பற்றிய முழு விவரம் | Kambar History in Tamil
கம்பர் வாழ்க்கை வரலாறு
கம்பன் வீட்டு கட்டுதறியும் கவி பாடும் என்ற பழமொழி உருவாகும் அளவிற்கு கம்பருடைய புகழ் கவி திறமையும் அனைவரும் இன்றைக்கும் பேசப்பட்டு வருகின்றது.கவிப்பேரரசர் கம்பர்,கவிச்சக்கரவர்த்தி கம்பர்,கல்வியில் பெரியவர் கம்பர் என்று அவருடைய கவித்திரனை பறைசாற்றும் விதமாக அவருக்கு பட்டங்கள் வழங்கப்படுகின்றது.
சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழியில் சொல்வன்மை கொண்டவராக இருந்தவர் இவருடைய ஆழமான கவிதை அனுபவமும் கற்பனையாற்றலும் புலமை திறனும் பெற்று அவருடைய சமகாலத்து புலவர்களான ஓட்டக்கூத்தர்,சேக்கிழார் போன்றோரின் நன்மதிப்பையும் பெற்றிருக்கின்றார்.
கம்பராமாயணம்,சிலைஎழுபது,சடகோபரர் அந்தாதி,சரசுவதி அந்தாதி,திருக்கை வழக்கம்,ஏரெழுவது மற்றும் மும்மணி கோவை போன்றவை இவர் படைத்த படைப்புகள் ஆகும்.இதில் முக்கியமாக கம்பராமாயணம் தமிழ் இலக்கியத்தில் தலைசிறந்த காவியமாக கருதப்படுகின்றன.
மேலும் கம்பரின் தனித்துவமான சுவைக்கினிய பாணியில் அதை படைத்ததனால் அது உலகவியல் அங்கீகாரம் பெற்று இருக்கிறது எனலாம்.ஒரு சிறந்த தமிழ் எழுத்தாளர்,அறிஞர்,கவிஞர்,நாடக ஆசிரியர் என்று பன்முகம் கொண்டு விளங்கிய கம்பர் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழ் இலக்கியத்திற்கு அவர் ஆற்றிய சாதனைகள் பற்றிய விவரங்களை மேலும் தொடர்ந்து பார்ப்போம்.
கம்பர் கிபி 12ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவழுந்தூர் என்ற இடத்தில் ஆதித்தன் என்பவருக்கு மகனாக ஒட்சன் என்ற உட்பிரிவில் பிறந்திருக்கிறார்.இவருடைய பெற்றோர்கள் கடவுள் நரசிம்மரின் தீவிர பக்தர்கள் என்பதனால் அவருக்கு கம்பர் என்று பெயர் சூட்டினார்கள் பிறகு கம்பா என்றால் தூண் என்று பொருள் பக்த பரவசத்தினால் காக்க நரசிம்மர் துணை பிழைந்து கொண்டு வந்தார் என்ற பக்தி கூற்றைக் கொண்டு அவருக்கு இந்த பெயரை வைத்தனர் அவருடைய பெற்றோர்கள்.
நாதஸ்வர வித்வான்கள் ஒச்சன் பரம்பரையில் பிறந்திருந்தாலும் இவர் தமிழ்நாட்டில் உள்ள வெண்ணை நெல்லூர் என்ற ஊரில் உள்ள ஒரு பணக்கார விவசாயி ஒருவரால் செல்வ செழிப்போடு எடுத்து வளர்க்கப்பட்டார் இளம் வயதிலேயே இவர் தொன்மையான மொழிகளான சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழியின் மீது ஆர்வம் கொண்டதால் இவருடைய நலம் விரும்பும் வள்ளல் சடையப்பன் முதலியார் என்பவரின் உதவியுடன் இந்த இரு மொழிகளை மிகுந்த ஆர்வத்துடன் கற்றுக் கொண்டார்.
சிறுவயதில் இருந்து இவருக்கு கவிதைகள் எழுதும் ஆர்வம் இருந்தது.அந்த மொழிகளின் அடிப்படையை பாரம்பரிய முறையில் நன்கு கற்று அவர் பல கவிதைகளும் நூல்களும் எழுதத் தொடங்கினார்.இதன்பிறகு அவரது கவிப்புலமை எட்டுத்திக்கும் பரவல் தொடங்கியது.
பிறகு இவர் மாபெரும் கவிஞராக உருவெடுத்தார்.பிறகு இவருடைய புகழை அறிந்த அப்போதைய சோழ மன்னர் அவருக்கு அழைப்பு விடுத்தார்.அரண்மனைக்குச் சென்ற இவர் மன்னரின் அன்பு கட்டளை ஏற்று இவருடைய படைப்புகளில் ஒரு சில வரிகளை அவருக்கு பாடி காட்டினார் அவரது கவித்திறனை நேரில் கண்டு வியந்த சோழ மன்னர் அவருக்கு கவிஞரின் பேரரசர் என்றும் அர்த்தம் உடைய கவிச்சக்கரவர்த்தி என்று பட்டம் சூட்டினார்.பிறகு அவருக்கு சொந்தமான பெருவாரியான நிலத்தை பரிசளித்து அதற்கு கம்பநாடு என்று பெயர் சூட்டப்பட்டனர்.
கம்பர் பிறந்த ஊர் மற்றும் மாவட்டம்
கம்பர் தேரழுந்தூர் என்ற ஊரில் கம்பர் மேடு என்ற இடம் உள்ளது.கம்பர் உபயோகிக்கும் மண்பாண்டங்களை உபயோகிக்கும் போது தினமும் அந்த இடத்தில் உடைத்ததால் கம்பர் மேடு என்று பெயர் வந்தது.பிறகு சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை என்ற இடத்தில் நடந்து சென்று அங்கு வாழ்ந்த பிறகு கம்பர் உயிர் இழந்தார்.கம்பருக்கு தேரழந்தூரில் மண்டபம் உள்ளது.
தேரழுந்தூரில் 108 திவ்ய தேசங்களில் பத்தாவது திவ்யதேசமான அருள்மிகு ஆ மரு வி பெருமாள் கோவில் இருக்கின்றது.இந்தக் கோவிலில் வைகாசி மாதம் திருவோணத்தில் நடைபெறும் தேர் திருவிழா முக்கியமான திருவிழாவாக கருதப்படுகிறது.இதேபோல் புரட்டாசி மாதம் நவராத்திரியில் தெப்ப உற்சவம் 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுகின்றது.மாதம் 22 நாட்கள் திவ்ய தேசத்தின் தனிப்பட்ட உற்சாகங்கள் மக்கள் ஆதரவுடன் சிறப்பாக நடைபெறுகிறது.இதனைத் தொடர்ந்து தை மாதம் அம்மாவாசை அவதாரம் உற்சவம் நடைபெற்று வருகிறது.
தேரழுந்தூர் டெல்டா மாவட்டத்தின் உள்ள மயிலாடுதுறையில் இருப்பதினால் அங்கு விவசாயம் தான் அந்த ஊருடைய தொழில் விவசாயிகள் வருடத்திற்கு இருபோகம் விவசாயம் செய்கின்றார்கள்.அதில் நெல் உளுந்து பருத்தி போன்ற நெற்பயிர்கள் பயிர் செய்கின்றார்கள்.அங்கு இருப்பவர்கள் விவசாயத்தை நம்பி தான் இருக்கின்றார்கள்.
கம்பர் பொன்மொழிகள்
நல்லோரைக் காப்பாற்றுவதற்கும் தீயோரை அழிப்பதற்கும் யுகம் தோறும் அவதாரம் செய்வேன் என்பது கண்ணன் மொழி.அரசியல் நெறியில் தவறு செய்தாரை தர்மமே,எமன் உருவில் வந்து தண்டிப்பதும்,பத்தினிகளை உயர்ந்தோர் போற்றுவது உண்மை என்பதும்,முன்வினைப் பயன் ஒருவரைத் தொடர்ந்து வந்து மறுபிறப்பிலும் பயன் தரும் என்பதும் அறநெறிகள்.
கம்பர் எழுதிய பாடல்கள்
கம்பர் தனிப்பாடல்கள் பாடிய கம்பராமாயணம் பாடியவர் அல்லர் என்பதை பாடல்களில் அமைந்துள்ளது.கம்பராமாயணம் அரங்கேற்றியது கிபி 885 கம்பர் தனிப்பாடல்களில் வரும் பாடல்கள் ஓட்டக்கூத்தரோடு போட்டியிட்டுக் கொண்டு பாடினார்கள்.ஓட்டக்கூத்தர் விக்ரமன் குலோத்துங்கன் இராசராசன் ஆகிய மூன்று அரசர்கள் வாழ்ந்த காலத்தில் இவர் வாழ்ந்து வந்தார்.கம்பரின் தனிப்பாடல்கள் தொகுப்பு காட்டும் பாடல்கள் 69 இருக்கின்றன.இவற்றில் கம்பரும் அம்பிகாபதியும் பாடிய பாடல் கம்பர் கால பாண்டியன் பாண்டியன் மனைவி இடைக்காடர் ஏகம்பவாணர் மனைவி கம்பர் வீட்டு வெள்ளாட்டி போன்றவர்கள் பாடிய பாடல்கள் இருக்கின்றன.
கம்பர் ஆசிரியர் குறிப்பு
கம்பர் என்பவர் தமிழ் கவிஞரும்,நூலாசிரியரும் ஆவார்.இவர் இயற்றிய கம்பராமாயணம் நூலானது புகழ் பெற்று இருக்கின்றது.கம்பராமாயணத்தினைப் படித்த பலரும் கம்பரின் கவித்திறனைப் பாராட்டியுள்ளனர்.கம்பருக்கு கல்வியிற் பெரியோன் கம்பன்,கவிச்சக்ரவர்த்தி போன்ற பட்டங்களைச் சேர்த்துள்ளனர்.கம்பரின் கவிஞரும், “கம்பன் வீட்டுக் கட்டுத் தமிழ்மொழியும் தமிழில் பாடும்”. இலக்கியத்தில் கம்ப இராமாயணமே மிகப்பெரிய இதிகாசம் என கருதப்படுகிறது.
கம்பர் இயற்றிய நூல்கள்
- சரஸ்வதி அந்தாதி
- சடகோபர் அந்தாதி
- ஏரெழுபது
- சிலை எழுபது
- திருக்கை வழக்கம்
- மும்மணிக்கோவை
- கம்பராமாயணம்
ஆகிய அனைத்தும் கம்பரால் இயற்றப்பட்ட நூல்கள் ஆகும்.
கம்பர் பெற்றோர் பெயர்
கம்பர் அவர்கள்கி பி 12 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள தமிழ்நாடு தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவழுந்தூர் என்னும் இடத்தில் ஆதித்தன் என்பவருக்கு மகனாக ஒச்சன் என்ற உட்பிரிவில் பிறந்தவர்.அவருடைய பெற்றோர்கள் கடவுள் நரசிம்மரின் தீவிர பக்தர்கள் என்பதனால் அவருக்கு ‘கம்பர்’ என்று பெயர் சூட்டினர்.
கம்பர் எந்த நூலின் ஆசிரியர்
கம்பராமயத்தை எழுதியவர் கம்பர் ஆவார்.இந்த நூலின் ஆசிரியர் கம்பர் ஆவார்.இந்த கதை என்பது ராமன் ,சீதை ,லட்சுமணன் ,ராவணண,அனுமன் இவர்கள் இந்து பேரும் தான் இந்த கதையின் விமர்சனமகும்.
கல்வியில் பெரியவர் கம்பர் என்று கூறியவர்
கம்பரை கவிச்சக்கரவத்தி என்றும் அழைக்கப்பட்டார்.கம்பர் என்றொரு மானுடன் வாழ்ந்ததும் என தன்னுடைய சுயசரிதையில் மகாகவி பாரதியார் கூறியுள்ளார்.தன்னுடைய பாடலில் “கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு” என்று பாடியுள்ளார்.
கம்பர் பற்றிய குறிப்புகள்
கம்பரின் தாய்மொழி தமிழ் என்றாலும் சமஸ்கிருதத்திலும் அவர் புலமைப் பெற்றே விளங்கினார்.அதற்கு சான்று அவர் எழுதிய கம்பராமாயனம்.முனிவர் வால்மீகி சமஸ்கிருதத்தில் படைத்த ராமாயணத்தை இவர் தமிழில் இவருக்குரிய பாணியில் மீண்டும் எழுதினார்.அவருடைய பாடல் வரிகளின் அழகு,அற்புதமான நயம்,உவமானம் மற்றும் பல வகையான வியக்கத்தகு கவிதை நடைகள் அவரது பாரம்பரிய கவிதைகளில் இடம் பெற்று இருக்கின்றது.தமிழ்மொழியின் பெருமையை இடைக்கால காலகட்டங்களில் அற்புதமாக வெளிக்காட்டியதால்.அவர் கம்ப நாட்டாழ்வார் என்று அழைக்கப்பட்டார்.அவர் கம்பராமாயணம் தவிர சிலையெழுபது,சடகோபர் அந்தாதி,சரசுவதி அந்தாதி,திருக்கை வழக்கம்,ஏரெழுபது மற்றும் மும்மணிக்கோவை போன்ற அற்புதப் படைப்புகளைப் படைத்தது இருக்கிறார்.
கம்பராமாயணம் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு தனிப்பட்ட இடத்தைப் பிடித்து இருக்கிறது.தமிழ் இலக்கியத்தையே வானளவிற்கு உயர்த்தியது என்று சொன்னால் அது மிகையாகாது.கவிதை வடிவங்களில் ஆளுமைப் பெற்றவராக இருந்த அவருடைய வார்த்தைகளில் பலவிதமான அற்புதங்களை நிகழ்த்துபவர் என்பது அக்காவியத்தில் பல இடங்களில் தெளிவாகத் தெரிகின்றது.உருவகமும்,உவமானமும் நிறைந்த கம்பராமாயணம்.பிறகு வரும் கவிஞர்களுக்கு ஒரு குறிப்புதவி நூலாக அமைந்து இருக்கிறது.வால்மீகி எழுதிய ராமாயணத்தில் 24, 000 ஈரடிகள் இருக்கும்.ஆனால் கம்பராமாயணத்தில் 11, ௦௦௦ சந்தங்கள் இருக்கும்.தமிழர்களின் கலாச்சார உணர்திறனுக்கேற்ப வால்மீகியின் ராமாயணத்தில் பல இடங்களை மாற்றி அமைத்து இருக்கிறார்.அவற்றுள் சில:
சீதையைக் கண்ட ஆஞ்சநேயர், அதை ராமனிடம் தெரிவிக்கும் போது,
“கண்டனன் கற்பினுக் கணியை கண்களால் ….”
என்ற அற்புத வார்த்தைகள் இன்றளவும் தமிழ் இலக்கியத்தில் மறக்கமுடியாத அடிகளாக இருந்து வருகிறது.
இராவணன், சீதையைக் கடத்திக் கொண்டு போகும் போது,
“அவள் கற்பிற்கே இலக்கணமாக இருந்தாள் என்பதற்காக, அவள் இருந்த குடிசையோடு சிறிதளவு நிலத்துடன் பெயர்த்தெடுத்து அவளைக் கடத்திக்கொண்டு போனான்”
என்றும் அற்புதமாக விளக்கியிருப்பார்.
போரில், ராமன் தொடுத்த ஒரு அம்பு, அவனது உடல் முழுவதும் துளைகளை ஏற்படுத்தியது.இதைக் கம்பர், “ராவணன் சீதை மீது கொண்ட அழிவுநோக்கிய காதல், அவனது உடலில் எங்குள்ளது என்பதை அறியும் சல்லடையாக இருந்தது அந்த அம்பு” என்று யாராலும் யூகிக்க முடியாத அளவிற்கு அற்புதமாக விளக்கியிருப்பார்.
கவிச்சக்ரவர்த்தி கம்பர் என்பவர் கிபி 1250 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.
இதுவரை வந்த தமிழறிஞர்கள் பட்டியலில்,கம்பர் யாரும் எட்ட முடியாத இலக்கில் உள்ளார் என்று தான் சொல்லவேண்டும்.ஆனால், இன்றளவும் தமிழ் அறிஞர்கள் மத்தியில்,கம்பரின் கவிதைத் தொகுப்புகள் இணையற்றதாகவே உள்ளது என்று சிறப்பாகவும், பெருமிதத்தோடும் சொல்லலாம்.
கம்பர் பற்றி கட்டுரை மாதிரி எழுதுங்கள்
கம்பர் படைப்பு இன்றுவரை பேசப்படுகிறது
தமிழ் க்கு கிடைத்த வைரம்
கம்பன் பற்றிய அருமையான பதிவு
Super