தாலி கட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன் | Thali Kattuvathu Pol Kanavil Vanthal
வணக்கம் நண்பர்களே.!!இந்த உலகத்தில் மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் தூங்கும் பொழுது கனவு வருவது வழக்கமான ஒன்றாகும். அப்படி வரும் கனவுகளுக்கு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.
அப்படி வரும் கனவுகளில் கெட்டது நடப்பது போலும் வரலாம் நல்லது நடப்பது போலும் வரலாம்.ஒரு சில கனவுகளில் நடப்பது போல் நேரில் நடக்கலாம். அதற்காக அனைத்து கனவுகளில் வருவது போல் நேரில் நடக்காது.
கனவுகளுக்கான பலன்கள் மட்டும்தான் நேரில் நடைபெறும்.தாலி அல்லது தாலி கட்டுவது போல் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக தாலி கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு நல்ல ஒரு எதிர்காலம் இருக்கிறது.அது மட்டுமில்லாமல் அதிர்ஷ்டங்கள், உறவுகளுடன் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சந்தோஷமாக வாழ்வீர்கள்.
தாலி கட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்
தாலி கட்டுவது போல் கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு பண இழப்பு அல்லது பொருள் இழப்பு ஏற்படும். ஒரு நல்ல பொருள் வாங்குவதற்கு பண இழப்பீடுகள் ஏற்படும்.
மாங்கல்யம் கனவில் வந்தால் என்ன பலன்
மாங்கல்யம் கனவில் வந்தால் கனவு காண்பவரின் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமணம் ஆகாதவராக இருந்தால் கூடிய விரைவில் நல்ல வரன் கிடைத்து திருமணம் ஆகும். கனவு காண்பவருக்கு நல்ல எதிர்காலம் அமையும். உறவினர்களிடமிருந்து பாராட்டு கிடைக்கும்.
தாலி வாங்குவது போல் கனவில் வந்தால்
தாலி வாங்குவது போல் கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு வாழ்வில் முன்னேறுவதற்கான நம்பிக்கை வரவிருப்பதையும், தன் வாழ்வை குறித்து ஒரு நல்ல செய்தி ஒன்றை கேள்விப்பட இருப்பதையும் இந்த கனவு உணர்த்துகிறது. தொழில் செய்பவராக இருந்தால் தனியாக ஒரு தொழிலை தொடங்கி தொழிலில் லாபம் பெறுவார்கள்.
தாலி கட்டிய பெண்ணிற்கு மறுபடியும் தாலி கட்டுவது போல் கனவில் வந்தால்
தாலி கட்டிய பெண்ணிற்கு மறுபடியும் தாலி கட்டுவது போல் கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு ஏதோ ஒரு புதிய மாற்றம் ஏற்பட இருக்கிறது. நெருங்கிய உறவினர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட இருப்பதையும் இந்த கனவு உணர்த்துகிறது.
சுமங்கலிப் பெண் கனவில் வந்தால் என்ன பலன் |
திருமணம் ஆகாத பெண்ணின் கழுத்தில் தாலி இருப்பது போல் கனவில் வந்தால்
திருமணம் ஆகாத பெண்ணின் கழுத்தில் தாலி இருப்பது போல் கனவில் வந்தால் கனவு காண்பது பெண்ணாக இருந்தால் உங்களுக்கு யாரோ ஒருவர் சூழ்ச்சி செய்ய இருப்பதையும், அன்புக்குரியவர்களை இழந்து விடுவோமோ என்று பயத்துடன் இருப்பீர்கள். மற்றவர்களிடம் வாக்குவாதம் செய்து கொண்டே இருப்பீர்கள்.பிறரிடம் இருந்து தனக்கு பாராட்டு வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு அதிகமாக உள்ளது.
மேலும் கனவுகளின் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்
பெண் கனவில் வந்தால் என்ன பலன் |
நண்பர்கள் கனவில் வந்தால் என்ன பலன் |
உறவினர்கள் கனவில் வந்தால் என்ன பலன் |
ஆண்கள் கனவில் வந்தால் என்ன பலன் |