இவர் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடித்த 2012 ஆம் ஆண்டு வெளிவந்த 3 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார்.3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அனிருத்தம் அறிமுகமானார்.
இந்த படம் காதலை மையமாக வைக்கப்பட்டு எடுத்திருந்தது இது ரசிகர்களை பெருமளவு கவர்ந்து இன்றளவும் அனைத்து ரசிகர்களுக்கும் பிடித்தமான பணமாக இருந்து வருகிறது அது மட்டுமல்லாமல் இந்த படத்தில் வந்த ஒவ்வொரு பாடலையும் ரசிகர்கள் இப்போது வரை ரசித்து கேட்டு வருகிறார்கள்.
இந்த படத்தை தொடர்ந்து கௌதம் கார்த்திக்,விவேக் ஆகியோர்கள் நடித்த வை ராஜா வை என்ற படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருந்தார். இப்படி இருக்கும் நிலையில் தற்போது லால் சலாம் எனும் படத்தை இயக்கி வருகிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் அவர்கள் முக்கிய கதாபாத்திரத்திலும் ரஜினிகாந்த் சிறிய தோற்றத்திலும் நடித்து வருகிறார்.
இப்படி இருக்கும் நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது மறைந்த பாட்டியின் நினைவு நாளை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பாட்டி புகைப்படத்தை அப்லோட் செய்து அதனுடன் சில உருக்கமான வரிகளையும் பதிவு செய்துள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது பாட்டியின் பிரிவு தாங்காமல் நீங்கள் இந்த மரண உலகத்தை விட்டு சென்றுவிடுங்கள் இன்னும் நீங்காத நினைவுகளை என்னுள் விட்டு சென்றாய்.. இன்று பாட்டியுடன் இருந்த நினைவுகளை இந்த பதிவின் மூலம் பகிர்ந்துள்ளார்.இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆறுதல் கூறி வருகிறார்கள்.